நானும் மனிதன்தானா…?

Posted: by MassFareeth in லேபிள்கள்:

நானும் மனிதன்தானா…?

இந்த உலகில்
ஐயோ
எத்தனை வலிகள்
முள்மீது நடக்கும்
உண்மைதான் ஏழையின்
வாழ்க்கையா?
காசிருக்கும் எத்தனையோ
பாவிகள் ஆடுகிறார்கள்
கண்மூடி ஆட்டங்கள்,,,
கண் மூடி உறங்கக்கூட
இடமில்லை இன்னும்
நாங்களும் மனிதர்களாக…
வாய் இருந்தும் பேச முடியாத
எங்களின் வாழ்க்கை
ஏனோ இறைவா?
ஏன் கொடுக்கவில்லை மாட
மாளிகைகளின் வாழ்க்கை
பயணங்களே
உறக்க கணவிலும்!!
வாழ்வது இத்தனை கஷ்ட்டமா!
கரைகிறது
ஒவ்வொரு
நொடியும் தேடல் கண்ணீராக!!!
நாங்களும் மனிதனா?
ஏன் பிறக்கவில்லை
வேறு உயிரனமாய்…
மாஸ்