சிறகடிக்கும் சிந்தனை…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

சிறகடிக்கும் சிந்தனை…

உன் கண்ணை கண்டதும்
எந்த விசையோ
தெரியவில்லையடி
உந்தன் பக்கம் அழைக்கிறது
என்னை
நீ இருக்கும் திசையே
தேடி
வருகிறதடி
வாடைக்காற்றும்
வெளிச்சம் வேண்டாமடி
வெண்ணிலவே
உன் வெள்ளை மனது
போதும் எனக்கு
அழகிகளின் ஆர்ப்பாட்டம்
அந்தப்புரம் இருக்க
இந்தப்புறம்
உன் அடக்கம் போதுமடி
என் சொந்தப்புரமாக
படர்ந்து இருக்கும் உன்
கூந்தலில்
மல்லிகை இதழும்
ரோஜா இதழ்களும்
முத்தம் தொடுக்க
பட்டாம்பூச்சி கூட்டமும்
அடம் பிடிக்குதடி
உன் கூந்தலில்
இடம் கிடைக்காதா
என்று?
குனிந்து செல்லும் குடும்ப
விளக்கே
என் இருட்டறை மனதை
ஒளியேற்ற வருவாயா?
J.முகம்மது ஃபரீத்