நானும் சிரிகின்றேன் வேறு வழி இல்லாமல்.

Posted: by MassFareeth in லேபிள்கள்:

நானும் சிரிகின்றேன் வேறு வழி இல்லாமல்.

வேறு வழி இல்லாமல்.
நானும் சிந்திக்கின்றேன்
எதற்க்கின்று தெரியாமல்
சொன்னார்கள்
உனக்கொரு நேரம்
வரும் என்று…!
தாண்டிவிட்டேன்
அந்த தருணத்தையும்
இன்னும் விடைகள் தெரியாமல்
நான் வாழ்வது நிஜ வாழ்வுதானா..?
நம்ப முடியவில்லை
என்னால்…!
ஏன் என்றால்
எதுவும்
எனக்கு சாத்தியம்
இல்லை என்பதால்
உறவுகளோடு இருந்தும்
உருப்பிடாதவனாய்
திரிகின்றேன்..!
உருத்துகின்றது
ஒவ்வொரு நிமிடமும்
யாரும் இல்லா
அனாதை போல நானும்…!
J.முகம்மது ஃபரீத்

சொல்லமுடியவில்லை உன்மேல் உள்ள காதலின் எல்லையே…

சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
மறந்துவிடுகின்றது
ஏனோ
உன்னை கண்டதும்
நீ என்மேல் காட்டும் பாசத்தைவீட
ஆயிரம் மடங்கு அதிகமாகவே
நேசிக்கின்றேன்
இருந்தும் தெரியவில்லை
எவ்வாறு வெளிபடுத்துவது என்று
தற்செயலாக நீ செய்யும்
ஒவ்வொரு குறும்பும்
என்னை தலை குனிய செய்கின்றது
என் குறும்பு
ஏனோ வரம்பு
மீரவேஇல்ல என்று
நானும் நினைக்கின்றேன்
இவ்வாறு செய்யவேண்டும்
அவ்வாறு செய்யவேண்டும் என்று
இருந்தும் நடிக்கின்றேன்
உன்னை
கண்டதும் எவ்வாரோ
காத்துக்கொண்டிருகின்றேன்
சொல்லமுடியவில்லை
உன்மேல் உள்ள
காதலின் எல்லையே…
J.முகம்மது ஃபரீத்

சிறகடிக்கும் சிந்தனை…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

சிறகடிக்கும் சிந்தனை…

உன் கண்ணை கண்டதும்
எந்த விசையோ
தெரியவில்லையடி
உந்தன் பக்கம் அழைக்கிறது
என்னை
நீ இருக்கும் திசையே
தேடி
வருகிறதடி
வாடைக்காற்றும்
வெளிச்சம் வேண்டாமடி
வெண்ணிலவே
உன் வெள்ளை மனது
போதும் எனக்கு
அழகிகளின் ஆர்ப்பாட்டம்
அந்தப்புரம் இருக்க
இந்தப்புறம்
உன் அடக்கம் போதுமடி
என் சொந்தப்புரமாக
படர்ந்து இருக்கும் உன்
கூந்தலில்
மல்லிகை இதழும்
ரோஜா இதழ்களும்
முத்தம் தொடுக்க
பட்டாம்பூச்சி கூட்டமும்
அடம் பிடிக்குதடி
உன் கூந்தலில்
இடம் கிடைக்காதா
என்று?
குனிந்து செல்லும் குடும்ப
விளக்கே
என் இருட்டறை மனதை
ஒளியேற்ற வருவாயா?
J.முகம்மது ஃபரீத்

நானும் மனிதன்தானா…?

Posted: by MassFareeth in லேபிள்கள்:

நானும் மனிதன்தானா…?

இந்த உலகில்
ஐயோ
எத்தனை வலிகள்
முள்மீது நடக்கும்
உண்மைதான் ஏழையின்
வாழ்க்கையா?
காசிருக்கும் எத்தனையோ
பாவிகள் ஆடுகிறார்கள்
கண்மூடி ஆட்டங்கள்,,,
கண் மூடி உறங்கக்கூட
இடமில்லை இன்னும்
நாங்களும் மனிதர்களாக…
வாய் இருந்தும் பேச முடியாத
எங்களின் வாழ்க்கை
ஏனோ இறைவா?
ஏன் கொடுக்கவில்லை மாட
மாளிகைகளின் வாழ்க்கை
பயணங்களே
உறக்க கணவிலும்!!
வாழ்வது இத்தனை கஷ்ட்டமா!
கரைகிறது
ஒவ்வொரு
நொடியும் தேடல் கண்ணீராக!!!
நாங்களும் மனிதனா?
ஏன் பிறக்கவில்லை
வேறு உயிரனமாய்…
மாஸ்

காந்தப்பார்வை இதுதானா?….

Posted: by MassFareeth in லேபிள்கள்:

காந்தப்பார்வை இதுதானா?….

மிரட்டி பார்காதே
மிரண்டு போய்விடுவேன் உன்
காதல் காய்ச்சலில்..
புன்னகை சிந்திடும் உன்
மென்மையான
சிரிப்பால் புத்துணாச்சி
பெறுகின்றேன்
பூ மாலை அடைகின்றேன்…
பெண்ணே உன் மலர்ந்த
பேச்சில்
மனதே திருடுகின்றாய்
என்னை
மயக்கச்செய்கின்றாய்….
J.முகம்மது ஃபரீத்

ஹாஸ்டல்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

ஹாஸ்டல்…

துள்ளித் துணிந்து தூக்கம்
சுமந்து
ஏக்கம் அற்று இருந்தொமடா..
வேலை செய்ய நேரமின்றி
விளையாட்டை
வேலையாய்க்கொண்டோமடா…
வீட்டின் கோபம் வேண்டாம்
சோறு
திசையெங்கும் திரிந்தோம்மடா..
காதலி வீட்டை கண்காணிக்கும்
முறையே
கடமே என்றிருந்தோம்மடா
வீடெங்கும் சப்த்தம்..
மனதெல்லாம் யுத்தம்..
இசைக்கருவியாய்
கரைந்தோம்மடா…
தெருஒரத்திண்டுகள்
தினம்தொரும்…
எங்கள் பிரென்ட்டுகலடா..
வெட்டிக்கதை பேசி
வீண் வம்பு இழுத்து
ஊர்வம்பாய் உரைத்தொமடா…
காலம் சுழன்று கடமை எழுந்து
ஹாஸ்டலுக்குள்
நுழைந்தொமடா..
மணியடுச்சா சாப்பாடு
ஏதேனும் ஆனதென்றல்
யாரும்மில்லை இங்கு கேட்பாடு..
புரட்டியெடுத்து தப்புடா
உடுப்ப அதோடத்தான்
சேர்த்து உன்னுடைய படிப்ப…
தப்ப தப்ப அழுக்கு போகுமடா
தப்பா ரீடிங் எடுத்தா
தாட்டு பாட்டுன்னு திட்டுக்கிடைக்குமடா..
சரியான தூக்கமடா
அடப்போ கிளாஸ்
ரூம்ல சரியான தூக்கமடா..
ஸ்டர்டி ஹவர்னு சாகுரோமடா
எப்படா
சனி ஞாயிறுனு ஏங்குரோமடா..
மண்டக்காயுதடா வீட்டு
ஞாபகத்தால்
தொண்ட காயுதடா…
J.முகம்மது ஃபரீத்

உனக்காக அழுகின்றேன்..

Posted: by MassFareeth in லேபிள்கள்:

உனக்காக அழுகின்றேன்..

உள்ளத்தில் உன்னை சுமந்து
கண்ணில் உருவம்
காட்டினாள்…
என் கண்ணை கட்டி
கண்ணாமூச்சி ஆடி
மகிழ்கிறாய்..
அனைவரும் மிரலும்
பயங்கிறக்குரலும்,
உன் கண்ணை
கண்டால் தட்டு தடுமாருதடி
காதலியே..
தனிமையில் தவிக்கின்றேன்
உன் ஞாபகத்தால்…
நீயோ,
தட்டிவிட்டு போகின்றாய்
எதுவும் தெரியாததுபோல..
காதல் கொண்ட பாவத்தால்
கண்ணீர் விட்டு அழுகின்றேன்..
காதலியே
நீ
நூறு ஆண்டு சிறந்து வாழ்க என்று …
J.முகம்மது ஃபரீத்

சாட்டிங்…..

Posted: by MassFareeth in லேபிள்கள்:

சாட்டிங்…..

என் கண்கள் உன்னை தேடி
அலைகிறது
எப்போது வருவாய் என்று…
எத்தனை நண்பர்கள் உள்ளபோதும்
நாடவில்லையடி
அத்தனையும் நீயாக முடியுமா?
என்ற எண்ணமும் தோன்ற….
இத்தனை நாள் இல்லாத
மாற்றம்
இன்று மட்டும் ஏனடி பெண்ணே….
இது தொடர்ந்தால் ஆண்டுகள்
தோறும்
ஆன்லைனாக மாறிவிடுவேனோ?
என்ற அச்சமும் தோன்ற….
எதுவும் நம்பர் கிம்பர் உண்டோ
என்று கேக்காமல்
கேக்குதடி என் கேள்வி கேடயமாக…
கேள்விக்குரியவளே பதில் கிடைக்குமா???
J.முகம்மது ஃபரீத்

வேண்டாம் இந்த காதல்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

வேண்டாம் இந்த காதல்…

வாய்கள் பேசும் மொழிகள் மறந்து
கண்கள் பேசும் மொழிகள்
கண்டேன்..
சப்த்தம் ஊமையாகி சைகைகள்
உயிர் வாழ…
கண்ணாடிக்கும் உருவம் வந்து
எனைக்கண்டால்
உன் முகம் தெரியுதடி பெண்ணே….
காற்றில் கூட பரக்கிறேனடி நான்
உன்
என்னச்சிறகில் பறக்க முடியவிள்ளயடி…
கடலினை கூட கடப்பேனடி ஏனோ
உன் வீட்டு
வாசல்படியே என்னால் கடக்க முடியவில்லையடி…
தீயில் கூட வாழ்வேனே நான்
உன் தீண்டலில்
வாழ முடியவில்லையடி….
காற்றிடம் கூட மொழி பரிமாருகிறேனடி
நான்
உன்னை கண்டு அசையா
ஓவியமாகிறேனடி ஏனோ…
பயமேனும் பெரிய பூட்டினால்
பூட்டி
சிரிப்பெனும் சிறிய சாவியால்
திரிக்கிறாய்….
வெரித்திடும் பார்வையில்
வெயிலையும் மிஞ்சுகிறாய்…
குரலேனும் மென்மயில்
குளிரையும் மிஞ்சுகிறாய்…
நடையேனும் கலையினால்
நிலத்தையும் கொஞ்சுகிறாய்…
அழகேனும் சிறப்பினால்
வானவில்லையும் விலைக்கு
வாங்கினாய்…
பாவி என்னையோ
காதல் தீயில் தள்ளினாயடி..
அதனால்.
வெந்தேன் வெந்தேன்
வெந்து நொந்தேன்..
உனது சிந்தனையால் எனது
சிந்தனையே மறந்தேன்..
உனது சிரிப்பால்
எனது சிரிப்பே மறந்தேனன்..
உனது படிப்பால்
எனது படிப்பே துளைத்தேன்..
உனது திறமையால்
எனது திறமையே இழந்தேன்…
பாவி பாவி நீயோ
என்னை மறந்து
பிரிந்து சென்றுவிட்டாய்….
J.முகம்மது ஃபரீத்

இதுவும் குற்றம்

Posted: by MassFareeth in லேபிள்கள்:

இதுவும் குற்றம்

வார்த்தைகலை எண்ணி
இது ஒரு குற்றமா…?
சிரிக்கிறேன் நானே…
யோசிக்காமல் பேசிவிடும் வார்தைகளே
தனியே மீண்டும் யோசித்தால் வேதனைதான்
அது இன்பமோ துன்பமோ…..
இதற்க்கு இதுதான் இப்படிதான்
இது என்று யோசனை செய்யாமல்
தானாக வரும் தாண்டவம் தான் குற்றமா….?
எத்தனை காலம் சென்றாலும் அத்தனையும்
குற்றமாக கருதிய மனதிற்கு
குக்குரலிடுமே ஐயோ….
எதில் துவங்கி எதில் முடிக்கவேண்டும்
என்ற திட்ட வட்டமே தீர்மானமாக மலர்கிறது….
இதே தீர்மானமாக எடுத்துகொண்டு
தினமும் கடைபிடிக்கமுடியுமா!!!!!
J.முகம்மது ஃபரீத்

முடிந்தது திருமணம் இனி எனக்கு இல்லை நறு மனம்…

துள்ளி துணிந்து திரிந்த மனம்
இன்று நொந்து வெந்து வேகுதம்மா….
எனது சிந்தனையில் வளர்ந்த நான்
உனக்கும் சிந்தனை உண்டு
என உணரவிள்ளயடி பெண்ணே!!
இடி போல் செய்திகேட்டு மழை போல்
அலுதுவடித்தேனடி!!
துடித்து போனேனடி
துண்பத்தில் மிதந்து போனேனடி!!
சிரித்து நீ போக சீரழிந்து நிற்கின்றேன்
என் சிரிப்பு சின்னாபின்னமாஹ!!
தடுத்து அணைபோட்டாலும் தாண்டி
வந்து பார்ப்பேனடி தடுப்பே இல்லாத
தாலியால் தடுமாறி போனேனடி!!
அலையே அலையே நில்லு
ஏன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றய்
உன் காதலியே கானாததினாலா!!
காற்றே காற்றே நில்லு
ஏன் அங்கும் இங்கும் அலைந்துதிரிகிறாய்
உன் காதலி பிரிந்த வருத்ததினாலா!!
மலரே மலரே ஏன் வாடுகின்றை
வாடாத உன் காதலியே கண்டு கண்டா!!
இரும்பாய் இருந்தாலும் இத்துபோவேனடி
பாவி நீயோ பிளாஸ்டிக்காய் படுதுகிராயடி பாவி!!
J.முகம்மது ஃபரீத்

காதல் வந்ததும்…

Posted: by MassFareeth in லேபிள்கள்:

காதல் வந்ததும்…

காதலியே உன்னை உணரவில்லயடி
என் உணர்வுகள்..
நீ இருக்கும் நேரத்தில் நான் தான்
ஹீரோ என்று நினைத்திருந்தேன் இப்போது தான்
தெரிந்தது நான் ஜீரோ என்று….
நீ தயங்கி வந்து பேசிய வார்த்தைகளே
மதிக்கவில்லை என் மனது ஐயோ….
அன்று நீ பார்க்கும் ஓரபார்வைகள் இன்று
குத்துதடி என்னை அம்ம்பாஹ…..
பெண்ணே ஏன் பிரிந்தேன் உண்ணே
இப்போது
உன் மனதில் நான் உள்ளேனா?????
அன்று நீ செய்த ஒவ்வொரு நிகழ்வும்
இன்று நான் செய்கின்றேனடி எதனால்????
உன்னிடத்தில் உணர்ந்தேனடி
காதல் இதுதான் என்று……
J.முகம்மது ஃபரீத்

கண்டது காதல்

Posted: by MassFareeth in லேபிள்கள்:

கண்டது காதல்
முதல் முறை பார்த்தபோது மயங்கினேன்
உன் ஈர்ப்பால் பெண்ணே….
மறுமுறை உன்னை காண வேண்டும் என்ற
மனநோயால் அலைகிறேன்….
மாறுதல் தந்தவளே…!
மருமுரைய் வருவாயா என் கண்முன்னை…
எங்கிருந்து நீ வந்தாய் பெண்னே…?
என் கண் உன்னை கண்டிட கண்களுக்கும் கலக்கமடி
இப்படியும் ஒரு பெண்ணா என்று…..!
கண்டதும் காதல் என்பார்களே அது இதுதானா
இன்று தான் புரிந்தது எனக்கு….
J.முகம்மது ஃபரீத்

உனக்கென நான் பிறந்தேன்…!

Posted: by MassFareeth in லேபிள்கள்:

உனக்கென நான் பிறந்தேன்…!

உனக்கென நான் பிறந்தேன்
உன்னுடன் வாழ்வதற்காக
உன்னால் என் திறமைகளை
அறிந்து கொண்டேன்
ஆனாலும் திறமையற்று நிற்க்கின்றேன்
நீ சுவாசித்து விட்ட
காற்றையும் தீண்டத்தகாதவனாய்
நீ பேசும் அந்த கிண்டல் பேச்சு
போதுமடி பெண்ணே
இன்று நான் கிறுக்கனாக கவிதைகள்
கிறுக்குவதற்க்கு
அன்று நாம் சென்ற ஓட்டை
பேருந்தின் இருப்பிடமும்
இன்று நன் செல்லும் பென்ஸ்ம் ஈடாகுமோ..?
சிலவு செய்ய பணம் இருந்தும்
உன் ஏழை மனதிற்குள்
நுழைய முடியாமல் செல்லாத
காசாய் கிடக்குறேனடி
தனிமையில் தவிக்கின்றேன்
உன் நினைவுகளால்
என்னை பற்றி எப்போதாவது
சிந்தித்ததுண்டோ பெண்ணே!
இந்த ஒரு கேள்வியில் வாடிப்போகின்றேன்
நீர் அற்ற மரத்தினை போல
உன்னை தொடர்ந்து வருகின்றேன்
உன் நிழலாய்
அய்யோ இருட்டறைக்குள் சென்று
மூடிக்கொல்லாதே இருட்டுடன்
கலந்துவிடுவேன் இவ்வுலகத்தை விட்டு
J.முகம்மது ஃபரீத்

காதலியா….! ஐயோ…….!

Posted: by MassFareeth in லேபிள்கள்:


காதலியா….! ஐயோ…….!


என்றுநினைகிறாயா
பெண்ணே….
செத்தாலும் உனக்காகத்தான்
உன் காலடியில்கிடந்தது
மடிவேன் என என்னுகிறாயா….
உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும்
உன் சிந்தனைதான் என் சிந்தனை
என உணருகிறாயா…
உலகில் உள்ள பெண்களில்
நீதான் நீதான்
என் கனவுக்கன்னி என்று நினைக்க வேண்டும்
என்ற கானல் நீரில் மூல்குகிறாயா
நான் துடிக்கும் ஒரே ஒரு வினாடில்
நீ இருந்துபார்
அப்போது தெரியும் என்
அனுதாப காதல் உனக்கு
காதல் இதுதான் என்று தெரியாத உன்னை
காதலித்த நான் செல்லும் இடம்
பைத்தியக்கார அரையடி….
                                               மாஸ் ஃபரீத்

கண் பேசும் பாசை

Posted: by MassFareeth in லேபிள்கள்:

Emeral-eyes_1440x900

நீ பேச துடிக்கும் ஒவ்வொரு வார்த்தையும்
பேசாமல் உணரவைக்கும் சக்தி !
உன் அடி மனதில் ஒளிந்திருக்கும்
உன் உண்மையான செய்திகளை உணர்ச்சியோடு
காட்டிகொடுக்கும் கள்வன்!
காதல் செய்யும் காதலருக்கு காதலை
அறிமுகபடுத்தி வைக்கும் நண்பன் !
உண்மையே மறைத்து வைக்க தெரியாத
மா மனிதன்!

எனக்கத்தான் பிறந்தாயா பெண்ணே!!

Posted: by MassFareeth in லேபிள்கள்:

one side
எனக்கத்தான் பிறந்தாயா பெண்ணே!!
ஏனடி தெரியவில்லை எனக்கு!!
ஏதேதோ என்னங்கள் தோன்றியும்
என்னை விட்டு போகவில்லையடி என் வார்த்தைகள்!!
எனக்கதான் நி என்று அன்றே தெரிந்திருந்தால்
சொல்லிஇருப்பேன்னடி என் இதய வார்த்தைகளை !!
நீ  பார்க்கும் ஒவ்வோரு பார்வையும் என் மனதிற்குள்
புத்துணர்ச்சியடி பெண்ணே !!
புன்னகே மலரே என் நிலமே தெரிந்துமா? சிரிக்கிறாய் பாவி!!
உன்னை நினைத்து ஏங்கும் என் மனது
புரியவில்லையா உனக்கு!!
என்னால் சிரிக்க முடியவில்லையடி!!உன்னுள் நான் இருக்கேனா?
இல்லையா? என்ற குழப்பத்தில் !!
பெண்ணே நான் உணக்கதான் சத்தியமாக சொல்லுவேன்
உன்னிடத்தில் ஒருநாள் !!!!
மாஸ்